ஈரான் வரை சென்ற முஸ்லிம் முதலமைச்சருக்கான கோரிக்கை |
[ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2008, 05:39 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] |
கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை நியமிக்க சிறிலங்கா அரச தலைவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈரான் அரச தலைவரை கோரிக்கை விடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. |
இது தொடர்பாக மேலும் தெரியாவருவதாவது: கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர், முதலமைச்சராக பிள்ளையானே நியமிக்கப்படவுள்ளார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக அடிபட்ட போதும், அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நாட்டில் இல்லாத காரணத்தினால் ஒன்றும் செய்துகொள்ள முடியாத நிலையிலிருந்த முஸ்லிம் அமைச்சர்கள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மந்திராலோசனை நடத்தினர். அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும் பிள்ளையானே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற உறுதியான ஊகங்கள் ஆளும் கட்சி வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்றதனை அடுத்து, அதற்குள் அதனை தடுத்து நிறுத்த எண்ணிய முஸ்லிம் அமைச்சர்கள், வெளிநாடுகளின் மூலம் இராஜதந்திர அழுத்தத்தை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குவது என முடிவெடுத்தனர். இதன்படி, அயல் நாடொன்றின் தூதரக அதிகாரிகளை அணுகி, தமது பிரச்சினையை கூறி, மகிந்த அரசுக்கு எடுத்துக் கூறும்படி கேட்டபோது, கிழக்கு மாகாணத்துக்கு தனியாக தேர்தலை நடத்தும் அரசின் முடிவிலேயே தமக்கு உடன்பாடில்லை என்று அறிவித்துவிட்ட நிலையில், அதன் முதலமைச்சர் நியமனம் தொடர்பில் என்ன கூறவேண்டிக் கிடக்கிறது என்று அவர்கள் கைவிரித்து விட்டனர். இதனை அடுத்து, ஈரான் தூதுவரை சந்தித்த வெளிவிவகார பிரதி அமைச்சர் உசைன் பைலா, முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள கதியை பார்வையிடுமாறு கேட்டுக்கொண்டார். ஈரான் அரச தலைவரின் வருகையாலேயே ஆளும் மகிந்த ராஜபக்ச கூட்டணிக்கு கிழக்கில் அதிக முஸ்லிம் வாக்குக்குகள் கிடைக்கப்பெற்றன. முஸ்லிம்களின் வாக்குகளில் வெற்றிபெற்று விட்டு இப்போது முஸ்லிம்களுக்கே மகிந்த ராஜபக்ச துரோகம் இழைக்கப்பார்க்கிறார். இந்த விடயத்தை ஈரான் வெளிவகார அமைச்சரின் ஊடாக ஈரான் அரச தலைவருக்கு தெரியப்படுத்தி, மகிந்த ராஜபக்ச அரசுக்கு அழுத்தம் கொடுத்து முஸ்லிம் சமூகத்துக்கு நீதி பெற்றுத்தர வேண்டும். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று ஈரான் தூதுவரை உசைன் பைலா கேட்டிருக்கின்றார். இதற்கு தாம் முயற்சி செய்வதாக தூதுவர் உறுதியளித்திருந்தார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. |
Sri Lanka was a land of paradise, the role model of multi ethnic and cultural community: Before the conflicts, but now the land of war, violence, uproar, conflicts, fear, and refugees. We need a rapid change: we need a PEACE LAND PEACE LANKA
Monday, May 19, 2008
ஈரான் வரை சென்ற முஸ்லிம் முதலமைச்சருக்கான கோரிக்கை
Thursday, May 15, 2008
கிழக்கின் தேர்தல
இருபது வருடங்களின் பின்னர் பிரிந்த கிழக்கின் தேர்தல் எதிர்பார்க்கப்பட்டது போலவே ஜனநாயகத்தை குழிதோண்டிப்புதைத்துவிட்டு நடந்து முடிந்துள்ளது. முஸ்லிம்களைப்பொறுத்தவரையில் இத்தேர்தல் முடிவுகள் பல்வேறு உண்மைகளையும் படிப்பிணைகளையும் விட்டுச்சென்றுள்ளது. ஒவ்வொருகட்டங்களிலும் நாமும் எமது அரசியல்வாதிகளும் தொடர்ந்தும் படிப்பினைபெறுபவர்களாகவே இருக்கப்போகின்றோமா என்ற பெரிய வினாவுடன் இப்பத்தியை வரைகின்றேன். கிழக்கின் தேர்தல் முஸ்லிம்களின் உண்மையான பலத்தை வெளிப்படுத்தும் ஒரு அரிய சந்தர்ப்பமாகவே எமக்கு முன்னால் வந்து நின்றது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கும் ஒரு இருப்பு இருக்கின்றது, இனப்பிரச்சினையில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், முஸ்லிம்களும் ஒரு தனியான இனமாக, தனியான தரப்பாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற கோஷங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கும், அதனை தேசிய சர்வதேசிய ரீதியில் நிருவுவதற்கும் கிடைத்த அரிய சந்தர்ப்பமாகவே கிழக்கின் தேர்தல் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எமது தலைவர்கள் என கூறிக்கொள்ளும் சுயநல வியாபாரிகளின் செயற்பாடுகளினால் எமது சமூகம் மீண்டும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றது.
தேர்தலுக்கு முன்னமே முஸ்லிம்தரப்பு குறித்த தேர்தலில் எவ்வாறு பங்கேற்கப்போகின்றது என்பது குறித்து பலரும் பல கருத்துக்களை முன்வைத்திருந்தனர். ஒரு சிலர் முஸ்லிம் தரப்பு அரசுடன் இணையவேண்டும் என்றும், இன்னுமொருசாரார் முஸ்லிம்தரப்பு தனித்துப்போட்டியிடவேண்டும் என்றும் வலுவாக விவாதித்துக்கொண்டிருக்கையில், அரசுடன் கூட்டுச்சேர்ந்துள்ள அமைச்சர்கள் மு.காவின் சின்னத்தில் அல்லாது வேறு ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு மு.காவை அழைத்தனர், இதன் பின்னால் உள்ள நயவஞ்சகத்தனத்தை முதன்மைப்படுத்தி ரவூப் ஹக்கீம் மேற்படி முன்மொழிவை நிராகரித்தார்.
“இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச சந்தையொன்றின் வியாபாரப்பண்டம்” என்ற கருத்து குறித்த தேர்தலின் மூலம் மீண்டும் நிரூபனமாகியுள்ளது. மகிந்தவின் அரசும் பேரினவாத சக்திகளும் இந்தியாவின் நிழலின் கீழ் ஒரு அணியாகவும். எதிர்கட்சி, விடுதலைப்புலிகள் மேற்கத்தேய அரசுகளின் நிழலின் கீழ் ஒரு அணியாகவும் திரண்டு யார் இனப்பிரச்சினை விவகாரத்தை அதிகாரப்பூர்வமாக கையில் எடுப்பது என்று பலப்பரீட்சை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். எனவே கிழக்கின் தேர்தல் இரு சாராருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே இருந்தது. இங்கு வேதனை தருகின்ற விடயம் என்னவென்றால் மேற்படி சூதாட்டத்தில் முஸ்லிம் தரப்பும் பங்கேற்றுக்கொண்டதுதான். மகிந்தவை கிழக்கின் மாகாணசபைத்தேர்தலுக்குல் வலுக்கட்டாயமாக இழுத்துவந்தது ஐ.தேசியக்கட்சியும் இந்தியாவும்தான். ஐ.தே. தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மீண்டும் மீண்டும் கூறித்திரிந்தது, மறுபக்கத்தில் இந்தியா 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும்படி அதிக அழுத்தம் கொடுத்தது. எனவே மகிந்த மேற்படி இரு நிலைகளின் சாதகங்களின் அடிப்படையில் தேர்தலில் குதித்தார். திரைமறைவில் ஏராளமான விடயங்கள் அரங்கேறி முடிந்தன.
ரவூப்ஹக்கீமும் தனது பங்கிற்கு தானும் தனித்தே போட்டியிடப்போவதாக அறிவித்தார், கருத்துக்கணிப்புகள் செய்தார், புத்திஜீவிகள் மார்க்க அறிஞ்ர்களை சந்தித்தார், என்றாலும் இறுதியில் தான் ஐ.தேவுடன் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார், ஹிஸ்புல்லாஹ் உடனடியாக கட்சிதாவினார், தன் குற்றங்களை மறைக்க அவருக்கு கட்சி தாவலைவிட வேறு எதுவும் கை கொடுக்காது என்பது அவருக்கு நன்கு தெரிந்தவிடயம். பதிலுக்கு மு.கா தலைவர்,தவிசாளர்,கூடவே பொதுச்செயலாளர் என மூன்று முக்கியபுள்ளிகள் தமது பாராளுமன்ற ஆசனங்களை துரந்து சமூகத்தின் நலன்கருதி கிழக்கை கைப்பற்றுவோம் என்று வீராப்புடன் களமிறங்கினர்.
தேர்தல் தினமும் வந்தது இருபக்கத்தின் வியாபாரிகளும் தமது நலனுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக எதையும் செய்யத்துணிந்தனர், மு.கா வளர்த்துவிட்ட பாயிஸும், ரிஷாதும் மு.காவிற்கு எதிராகவே மு.காவின் தாயகத்தில் வன்முறைகள் செய்ததாக அறியக்கிடைத்தது. இறுதியாக அரசு வெற்றிபெற்றதாக தேர்தல் முடிவுகளும் வெளியாகின.
மு.கா மீண்டும் ஒருமுறை ஒப்பாரிவைக்கத்துவங்கியது. நியாயமற்ற தேர்தல், பகற்கொள்ளை என்றெல்லாம் கூறியது, மறுபக்கத்தில் யார் முதலமைச்சர் என்பது குறித்த இழுபறிகள் விவாகாரமாயின. ஆனாலும் இருதரப்பும் தமது எஜமானர்களை திருப்த்திபடுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தினர். மு.காவும் ஐ.தே.கவும் மேற்கைத்தேயர்களை திருப்த்திப்படுத்தவும், ஐ.ம.சு.கூ இந்தியாவையும் திருப்த்திப்படுத்துவதிலுமே அதிக கவனத்துடன் இருப்பது புலப்படுகின்றது. இதனூடாக மட்டுமே தமது நலன்கள் பேணப்படும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.
இத்தேர்தலில் முஸ்லிம்தரப்பு இரு அணிகளாகவே களம் கண்டது, ஒன்று அரசுடன் ஒட்டிக்கொண்டுள்ள தற்காலிக முகவர்கள், அடுத்து மு.கா என்னும் முஸ்லிம் சமூக அடையாளம், இதில் தற்காலிக முகவர்கள் குறித்த கவலை அதிகம் எமக்குத்தேவை இல்லை எனினும் மு.கா குறித்தே எமது அதிக கவனம் செல்கின்றது, மு.கா தனது வரலாற்றில் மீண்டும் ஒருதடவை அதள பாதளத்திற்கே சென்றுள்ளது என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது, கிழக்கிழங்கை முஸ்லிம் காங்கிரஸின் தாயக பூமி, இனப்பிரச்சினையில் முஸ்லிம்களி பங்கு அதிகம் சட்டரீதியாக வலுப்படுத்தப்படவேண்டிய தேவயுள்ள சூழலில், முஸ்லிம்கள் ஆயுதக்குழுக்களாலும், புலிகளாலும் அச்சுருத்தப்படும் சூழலில் நாம் தேர்தலை எதிர்கொண்டோம், எனவே தூய்மையாக சமூகநலனை மட்டும் கருத்தில் கொள்ளும் ஒரு கட்சியாக மு.கா இருக்குமாயின் முஸ்லிம்களின் மொத்தப்பலத்தையும் காட்டுவது பொருத்தமா, அல்லது தமது எஜமானர்களின் கனவுகளை நனவாக்குவது பொருத்தமா, மு.கா இரண்டாவதையே செய்யத்துணிந்தது. ஐ.தே.கவின் நலன்களுக்கு துணைபோவதே தனித்துவத்தலைவரின் முடிவாகியது. முஸ்லிம் சமூகத்தின் நலன்குறித்து எதுவித அக்கறையும் இன்றி முஸ்லிம் சமூகத்தை மீண்டும் ஒருதடவை வேதனை மிகுந்த அரசியல் சூனியத்திற்குள் வலுக்கட்டாயாமக நகர்த்தியதே அவரது சதனைகளாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் தனித்துப்போட்டியிடுவதில் என்ன பாதகம் இருக்கின்றது? இந்த வினாவிற்கு இன்னமும் மு.காவிடமிருந்து உருப்படியான பதில் எதுவும் வந்ததாக அறிய முடியவில்லை. தனித்துப்போட்டியிட்டிருந்தால் ஒன்றில் முஸ்லிம்களின் வாக்குப்பலத்தினை மட்டும் வைத்து கிழக்கின் பெறும்பான்மையினைக்கைப்பற்றியிருக்க முடியும் அல்லது மிகப்பிரதான பேரம்பேசும் சக்தியாக திகழ்ந்திருக்க முடியும். இன்னொருகோணத்தில் அரசுடன் ஒட்டிகொண்டுள்ள தற்காலிக முகவர்களின் வாக்குப்பலவீனத்தை நிரூபித்து முஸ்லிம் சமூகத்தின் பிரதான பிரதிநிதியாக மு.காவை நிலைநிருத்தியிருக்க முடியும். மாற்றமாக மு.கா செய்ததெல்லாம் மீண்டும் எமது தனித்துவம் இழந்து பெரும்பான்மைக்கட்சிகளுடன் கூட்டுச்சேரும் வெட்கம்கெட்டசெயலை அறிமுகப்படுத்தியதும், தற்காலிக முகவர்களின் செயற்பாடுகளுக்கு உரமிடும் வகையில் நடந்துகாட்டியதுமேயாகும்.
தொகுதிவாரியான முடிவுகளை நோக்குமிடத்து குறித்த சில தொகுதிகளில் மு.காவின் பலம் சரிவடைந்திருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது. அத்துடன் பெருன்பான்மைக் கட்சிகளின் தற்காலிக முகவர்களாக செயற்படும் அமைச்சர்கள் தமது வாக்குப்பலத்தை எடைபோடுவதற்கும் மு.கா வழி செய்தது என்றே சொல்லத்தோன்றுகின்றது.
தொகுதிவாரியான முடிவுகளின்படி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தவிர்ந்த ஏனைய தொகுதிகளை மு.கா இழந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லாத்தொகுதிகளையுமே மு.கா இழந்துள்ளது திருகோணமலை மாவட்டத்தில் மு.கா வெற்றி பெற்றுள்ளது. மிக அதிக அளவிலான தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை யாவரும் அறிந்த விடயமே, பொதுவாக ஜனநாயக அலகொன்றில் இத்தகைய மோசடிகள் ஒன்றும் புதிதல்ல, அதுவும் மிகப்பலவீனமான ஜனநாயக அலகொன்றைக்கொண்ட இலங்கைபோன்ற தேசமொன்றில், தமது சொந்த இலாபத்தை அடிப்படையாகக்கொண்ட அரச இயந்திரமொன்று செயற்படும் சூழலில் இத்தகைய மோசடிகள் இடம்பெறாது என்றும், அல்லது அவ்வாறு இடம்பெற்றாலும் கூட அதனை நீதியின் முன் நிறுத்தி சத்தியத்தை நிலைநாட்டலாம் என்று எதிர்பார்ப்பதும் அரசியல் முதிர்ச்சியின்மையினையே காட்டுகின்றது. எனவே உண்மையான திட்டமிடல் ஞானம் உள்ளவர்களாயின் குறித்த ஒரு சூழல் ஏற்படாமல் எவ்வாறு தேர்தலை நகர்த்துவது என்பதில்தான் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டுமே தவிர, நடந்து முடிந்த பின்னர் ஒப்பாரிவைப்பது அழகல்ல. மு.காவைப்பொறுத்தவரையிலும் ரவூப் ஹக்கிமைப்பொறுத்தவரையிலும் இவை குறித்த அறிவு இல்லாதவர்கள் என்பதை ஏற்க முடியாது, மாறாக தமது நிகழ்ச்சிநிரழுக்குள் மேற்படி விவகாரம் முக்கியத்துவமற்ற ஒன்று என்பதாலேயே அவர்கள் குறித்த விடயத்தை விடுத்து மாற்று வழிகளில் சிந்திக்கவும் செய்ற்படவும் துணிந்தனர். அசத்தியம் ஒருபோதும் நிலைக்காது என்பதற்கு மு.காவின் தோல்வியும் ஒரு உதாரணமாகிப்போனது.
மறுபுரம் அரசுடன் இணைந்துள்ள தற்காலிக முகவர்களின் தேவையெல்லாம், மஹிந்த அரசினையும் அவர்களது திட்டங்களையும் வெற்றிபெறச்செய்வதே தவிர முஸ்லிம் சமூகத்தின் நலன் அல்ல. எனவே இன்று அரசுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகவே வன்முறைகள் செய்வதற்கும் துணிந்துவிட்டார்கள், அப்படி இல்லையென்றால் புத்தளத்தில் உள்ள பாயிஸுக்கும் ரிஷாதுக்கும் திருகோணமலையில் என்ன வேலை வேண்டிக்கிடக்கின்றது. மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை அழைத்து வந்து கள்ள வாக்குப்பதியவைக்கும் ரிசாதின் கேவலமான செயற்பாட்டை என்னவென்று சொல்லுவது. மட்டக்களப்பில் அமீரலியின் அடாவடித்தனங்களையும் அம்பாறையில் அதாவுல்லாவின் கொட்டத்தையும் காணுகின்றபோது தமது எஜமானர்களை திருப்ப்திப்படுத்துவதில் இவர்களுக்கு உள்ள கரிசனையும் கடையர்களின் அரசியல் முறையின் அசிங்கத்தையும் எழுதுவதற்கு வார்த்தைகள் இல்லை. ஆனால் எல்லாமே சமூகத்தின் பெயராலேயே அரங்கேறுகின்றது.
ஒட்டுமொத்தமாக கிழக்கில் முஸ்லிம்களின் பலத்தை நிரூபிக்கக்கிடைதத ஒரு அரிய சந்தர்ப்பத்தை எல்லாத்தரப்புமே பரிகொடுத்துவிட்டு இன்று முதலைமச்சருக்கும் இன்னும் இதர அமைச்சுக்களுக்கும் அடிபடும் அவலம் எம்மை சூழ்ந்துகொண்டுள்ளது. எம்மவர்களுக்கு இதுவல்ல இன்னுமின்னும் பல சந்தர்ப்பங்கள் வரினும் தமது சொந்த நலன் குறித்த நிகழ்ச்சி நிரலை முதன்மைப்படுத்தும் தலைவர்கள் இருக்கும் காலமெல்லாம் எதுவும் பலன் தரப்போவதில்லை.
Tuesday, May 13, 2008
Monday, May 12, 2008
கிழக்கு தேர்தலுக்குப் பின்னான சலசலப்பு : முஹம்மட் அமீன்
UNITED PEOPLE’S FREEDOM ALLIANCE ……………308,886 52.21% *20 Seats
UNITED NATIONAL PARTY ……………………………….250,732 42.38% 15 Seats
PEOPLE’S LIBERATION FRONT …………………………..9,390 1.59% 1 seat
TAMIZH DEMOCRATIC NATIONAL ALLIANCE ……7,714 1.30% 1 seat
EELAM PEOPLE’S DEMOCRATIC PARTY ………………5,418 0.92%
UNITED SOCIALIST PARTY …………………………………2,548 0.43%
EELAVAR DEMOCRATIC FRONT ………………………….2,275 0.38%
UNITED NATIONAL ALLIANCE ……………………………..579 0.10%
PEOPLE’S FRONT OF LIBERATION TIGERS …………..383 0.06%
AKILA ILANKAI TAMIL UNITED FRONT ……………….378 0.06%
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய 3 மாவட்டங்களிலும் சுயேச்சைக்குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகள் 2633 ஆகும். இத்தேர்தலில் 56 சுயேச்சைக் குழுக்கள் போட்டியிட்டன. அவற்றுள் 54 சுயேச்சைக் குழுக்கள் தனது கட்டுப் பணத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசியலில் கடந்த ஒரு மாதகாலமாக முக்கிய கருப்பொருளாக இருந்துவந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நிறைவு பெற்றதையடுத்து கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேர்தலின் முன்பு கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெறுபவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதாக தெரிவித்திருந்தது.
குறிப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தே முதலமமைச்சர் ஒருவர் தெரிவாவதை விரும்பியிருந்தது. இதனடிப்படையிலேயே பிள்ளையான் அல்லது ஹிஸ்புல்லாஹ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நடைபெற்ற தேர்தலில்; ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்ற விருப்பு வாக்குகள் பின்வருமாறு.
41,931 பிள்ளையான்
36,419 ஜவாஹிர் சாலி முஹமட்
35,949 எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
34,318 எம்.எஸ். சுபைர்
23,456 ஜெயம்
22,176 பிரதீப் மாஸ்ரர்
எனவே கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)கிழக்கு மாகாண முதலமைச்சராக ஜனாதிபதியினால் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. (இதுவரை உத்தியோகபூர்வமான அறிவித்தல் வெளிவரவில்லை). கிடைக்கும் தகவல்களின்படி பிள்ளையான் நாளை மறுதினம் (14 ஆம்திகதி புதன்கிழமை) ஜனாதிபதி முன்னிலையில் முதலமச்சராகப் பதவிப்பிரமாணம் எடுப்பாரெனவும் தெரிய வருகின்றது.
இது இவ்வாறிருக்க. கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் குறித்து அரசியல் தலைவர்களின் கருத்துக்களை நோக்குவதும் அவசியமானதாகும். இந்த அடிப்படையில் கீழே சில கருத்துக்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்தைத் தோற்கடித்து சமாதானத்தை ஏற்படுத்த மக்கள் ஆணை - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச:
பயங்கரவாதத்தைத் தோற்கடித்து ஜனநாயகத்தைக் கட்டி யெழுப்புவதற்கும், நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கும் அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு கிழக்கு மக்கள் பூரண ஆதரவினை அளித்துள்ளனர். 2 தசாப்த காலமாக தமக்கு இல்லாதிருந்த ஜனநாயக உரிமையினை மீளப் பெற்றுக் கொள்ளவும், தமது அன்றாட நடவடிக்கைகளில் இயல்பு நிலையை தோற்றுவிக்க வேண்டுமென்ற அரசாங்கத்தின் கொள்கைக்குக் கிடைத்த மக்கள் அங்கீகாரமாகவே இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
கடந்த மார்ச்சில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலைத் தொடர்ந்து தற்போது கிழக்கில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கும் தேர்தலானது புலிகளின் ஆதிக்கத்திலிருந்த பகுதிகளில் ஜனநாயக உரிமைகைளை மீள நிலைநாட்ட வேண்டுமென்ற அரசின் கொள்கையின் முக்கியமான மைல்கல்லாகும். அமைதியான முறையில் கிழக்கு மாகாண வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றுள்ளனர். தமது ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்ற விருப்பத்தை பெருமளவானோர் வெளிப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதத்தின் பிடியினால் அவர்களின் இந்த உரிமைகள் இரு தசாபத் காலமாக முடக்கப்பட்டு இருந்தன. தேர்தலில் பங்குபற்றிய சகல அரசியல் கட்சிகள், தேர்தல் திணைக்கள அதிகாரிகள், ஏனைய அரச அதிகாரிகள், ஆயுதப்படையினர், பொலிஸார் ஆகியோருக்கு தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவியதற்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
தமிழ் மக்களின் வாக்குக் கொள்ளையை சான்றுகளுடன் நிரூபிப்பேன் - மு கா தலைவர் ரவூப் ஹக்கீம்:
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளே பெருமளவில் மோசடி செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தல் முடிவுகளைத் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கு எதிராகப் போராடி தேர்தல் மோசடியை குறைவடையச் செய்வதற்கான துணிச்சல் திருகோணமலை மக்களிடம் காணப்பட்டது. எனினும், மட்டக்களப்பு, அம்பாறையில் அரசால் இலகுவாக மோசடி புரிய முடிந்தது. தமிழ் மக்கள் வாழும் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கள்ள வாக்களிப்பில் ஈடுபட்டனர். பிள்ளையான் குழுவுடன் இணைந்து அரசு எவ்வாறு மோசடியில் ஈடுபட்டது என்பதை சான்றுகளுடன் தாம் நிரூபிப்போம்.
தேர்தல் வன்முறைகள் நிகழ்ந்ததாக எனக்குத் தெரியவில்லை - ரிஎம்விபி பிரதித் தலைவர் பிள்ளையான்:
உள்ளுராட்சித் தேர்தலைப் போல் மக்கள் வாக்களித்து எங்களைப் பலப்படுத்தவில்லை என்பதில் கவலையடைகின்றேன். ஆயினும் உள்ளுராட்சித் தேர்தலும் மாகாணசபைத் தேர்தலும் சற்று வேறுவேறானது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இப்போது ஆட்சி அமைப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறோம். தேர்தல் வன்முறைகள் என்று எதுவும் இடம்பெற்றதாக எனக்கோ எமது கட்சிக்கோ எதுவும் தெரியவரவில்லை.
அப்படி ஒன்று நடந்திருந்தால் ஒரு தரப்பார் தான் அதிகம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் எதிர்த்தரப்பினர் எதிர்பார்த்ததிலும் பார்க்க அதிக வெற்றியைப் பெற்றுள்ளனர். அதை மகிழ்ச்சி அடையக் கூடிய விசயமாகத்தான் நான் பார்க்கிறேன். இன்னொரு தேர்தல் நடத்த வேண்டிய வாய்ப்பு இல்லை. நாங்கள் ஆயுதம் அரசியல் என்று குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும் வரை எமது கட்சியினரதும் மக்களதும் பாதுகாப்புக்காக நாங்கள் ஆயுதங்களை வைத்திருப்பது தவிர்க்க முடியாதது.
தேர்தல் முடிவுகளை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம். - ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க:
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொள்ளாது. அதனை நாம் நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம். அரசியலமைப்பு சபையினை நியமிக்காது தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்களைக் கட்டிப்போட்டு நடத்தப்பட்ட ஊழல் மோசடிகள் மற்றும் அச்சுறுத்தல்களே அரசாங்கத்தை இத்தேர்தலில் வெற்றிபெறச் செய்துள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் மக்கள் தீர்ப்பல்ல. பலாத்காரமாக பெற்றுக் கொள்ளப்பட்ட தீர்ப்பேயாகும். எனவே, தேர்தலில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்துவதற்காக உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டாரவை கோரவுள்ளோம்.
கிழக்கில் தேர்தல் நடத்துவதற்கு முன்பு ஆயுதக்குழுக்கள், நிராகரிக்கப்பட வேண்டும். அவர்களது முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் ஊழல் மோசடிகள், பலாத்காரங்கள், அச்சுறுத்தல்களை அரசாங்கமும், அமைச்சர்களும் இவர்களது குண்டர்களும் மேற்கொண்டு வருவதை தேர்தல்கள் ஆணையாளருக்கு, பொலிஸ் மா அதிபர் உட்பட உரியவர்களுக்கு அறிவித்தோம். தேர்தல்கள் ஆணையாளர் மேற்கண்ட விடயம் தொடர்பாக உரியவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய போதும் எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
வடக்கு கிழக்கு தனித்தனியாக இயங்க மக்கள் அங்கீகாரம் - அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த:
வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் மீள ஒன்றிணைக்கப்படாமல் தனித்தனியாக இயங்க வேண்டும் என்பதற்கான மக்கள் அங்கீகாரத்தையே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வெற்றி தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அதிகவாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெறச் செய்ததன் மூலம் மக்கள் இனவாதத்தை புறக்கணித்துவிட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளனர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது. எதிர்த் தரப்பினரின் அனைத்து வகைப் பொய்ப் பிரச்சாரங்களையும் புறக்கணித்து மக்கள் ஐக்கிய முன்னணிக்கு வாக்களித்து அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்துள்ளனர். வடக்கோடு இணையாமல் கிழக்கு தனி மாகாணமாக இருப்பதையே கிழக்கு மக்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் புலப்படுத்துகின்றன.
இனவாதத்தை கட்டவிழ்த்து தேர்தலில் வெற்றிபெற முயற்சித்த சக்திகளையும் மக்கள் இத்தேர்தலில் தோற்கடித்துள்ளனர்.
பகற் கொள்ளையால் பெற்ற வெற்றி - மு கா பிரதிச் செயலாளர் நிசாம் காரியப்பர்:
அரசாங்கத்தின் கைக்கூலிகளும், அமைச்சர்களும் அடாவடித்தனமாக நடந்து கொண்டதுடன் எமது மக்களின் பல்லாயிரக்கணக்கான வாக்குகளை கொள்ளையிட்டு பெட்டிகளை நிரப்பி அரசாங்கத்தை ஒரு போலியின் உச்சத்தில் தூக்கி வைத்திருக்கின்றமை ஒரு வெட்கம் கெட்ட செயற்பாடாகும்.
இந்த மோசடிகள், வன்முறை அடாவடிகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் உடனடியாக முறைப்பாடு செய்த போதிலும் அவர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இருந்து தவறியுள்ளமையும் மேற்படி சம்பவங்கள் குறித்து பொலிஸாரும் பாதுகாப்புப் பிரிவினரும் அசமந்தப் போக்கைக் கடைபிடித்தமை ஒரு பக்கச்சார்பான நிலைமையையே தோற்றுவித்துள்ளது. கிழக்குத் தேர்தல்களில் இடம்பெற்ற அனைத்து முறையற்ற கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கும் பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்பு அதிகமாகவே காணப்பட்டது. தனது அதிகாரத்தின் மூலம் கிழக்குத் தேர்தல்களில் பட்டப் பகல், கொள்ளையை நடத்தி போலியானது வெறுமையானதுமான வெற்றியையே அரசாங்கம் பெற்றிருக்கின்றது.
கிழக்கில் ஒன்றுபட்டு வாழ்வதற்கு மூவின மக்கள் இணக்கம் - ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்..எம்.அஸ்வர்:
இணைக்கப்படாத கிழக்கு மாகாணத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தனித்துவம் பேணி சமாதானமாக ஒன்றுபட்டு வாழ்வதற்கான இணக்கத்தையே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் புலப்படுத்தியுள்ளன. மேற்குலக வல்லரசுகளின் துணையோடு ரணில் - ஹக்கீம் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியின் ஆட்டங்களுக்கு தற்போது முடிவுகாலம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் பலவந்தமாக வடக்கு மாகாணத்தோடு இ.ணைக்கப்பட்டதை கிழக்கு வாழ் மூவினமக்களும் விரும்பவில்லை. இதன் மூலம் இம்மக்களின் விகிதாசாரத்திலும் பாரிய வித்தியாசமும் ஏற்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதன் மூலம் கிழக்கு வாழ், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு கௌரவமும், தனித்துவமும் கிடைத்துள்ளது. வடக்கோடு இணைக்கப்படாத தனி கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை இம்மக்கள் இத்தேர்தல் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
சிறிய அசம்பாவிதங்கள் தவிர சுமுகமான முறையில் வாக்களிப்பு - தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க:
20 வருடங்களுக்குப் பின்னர் கிழக்கு மாகாணசபைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலொன்றை ஜனநாயக ரீதியில் நடத்தி முடித்துள்ளோம். 3 மாவட்டங்களிலும் பாரிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. சிறு சிறு சம்பவங்களே இடம்பெற்றுள்ளன. தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்கக் கிடைத்தமையையிட்டு மனநிறைவு கொள்கின்றேன். இத்தேர்தலை நடத்தி முடித்ததன் மூலம் நீண்டகாலமாக பாதுகாப்பற்ற பிரதேசங்களில் நெருக்கடிகளுடன் வாழ்ந்த மக்களுக்கு சிவில் நிர்வாகத்துக்குள் செயற்பட வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் தமது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முடிந்துள்ளது. தெற்கிலுள்ள ஏனைய மாகாணங்களில் வாழும் மக்களைப் போன்று கிழக்கு மக்களும் இன்று முதல் சுயமாக இயங்கும் இயல்பு நிலையை உருவாக்க முடிந்தமையையிட்டு நாம் பெருமிதமும், மன ஆறுதலும் அடைகின்றோம்.
சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகின்றது ஐக்கிய தேசியக் கட்சி! - யுஎன்பி பா உ லக்ஸ்மன் கிரியெல்ல:
தமது கட்சி கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகளுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போகின்றது. இத்தேர்தல் மோசடிகள் தொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்தப் போகின்றோம். அரசு தனது கபடத்திட்டப்படி பாரிய வன்முறை, மோசடிகள் ஊடாக இத்தேர்தலில் வெற்றிபெற்று இருக்கின்றது. இது தொடர்பாக நாம் எழுத்துமூலம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளோம். வாக்குச் சாவடிகளில் வன்முறைகள் இடம்பெற்றமையை வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் உறுதிப்படுத்தாவிட்டால் அதற்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
வன்முறைகள் இடம்பெற்ற வாக்குச்சாவடிகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் அரசின் கைக்கூலிகள் என்றால் அந்த வன்முறைச் சம்பவங்களை அவர்கள் உறுதிப்படுத்த மாட்டார்கள்.
இருப்பினும், தேர்தல் மோசடிக்கெதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் முடிவெடுத்துள்ளோம். அதேபோல எவ்வாறு இந்த மோசடிகள் இடம்பெற்ற என்பதை நாம் மக்களுக்குத் தெளிபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றையும் முன்னெடுக்க உள்ளோம்.
ஆயுதம் ஏந்திய குழுக்களுடன் ஜனநாயகம் சாத்தியப்படாது - ஜே.வி.பி. பா உ அநுரகுமார திஸாநாயக்க:
கிழக்கு மாகாணத் தேர்தல் ஆரம்பித்திலிருந்து அரசு சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலொன்றை நடத்த முயற்சி எடுக்கவில்லை. இத்தேர்தலில் அரசு செயற்பட்டது ஆயுதம் ஏந்திய குழுவுடன் கூட்டிணைந்தாகும். அந்த ஆயுதம் ஏந்திய குழு செயற்பட்ட பிரதேசங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த ஆயுதம் ஏந்திய குழு தமது ஆயுதங்களைப் பயன்படுத்தியதா இல்லையா என்பது வேறு விடயம். இருப்பினும், அவர்கள் ஆயுதம் வைத்திருந்ததால் ஏனைய கட்சிகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன. அதேபோல அரசு சொத்துக்கள் இத்தேர்தலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன.
கிழக்கு மாகாணம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பின்பு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் பிரிய வேண்டுமென நாங்கள் முழுமையாக பாடுபட்டோம். பிரிப்பின் உண்மையான நிலையை மக்கள் அனுபவிக்க அவர்களுக்கு பூரண ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும். ஆயுதம் ஏந்திய குழுக்களுடன் இது சாத்தியப்படமாட்டாது.
தேர்தல் வெற்றி யுத்தத்திற்கான அங்கீகாரமாகும் - பாதுகாப்பு விவகார பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல:
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சிக்குக் கிடைத்த வெற்றியானது விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிப்பதற்கான அங்கீகாரமாகும். பயங்கரவாதத்துக்கு எதிராகக் கிடைத்திருக்கும் தெளிவான மக்கள் ஆணையே இத்தேர்தல் வெற்றி. புலிகளின் பிடியிலிருந்த கிழக்கை விடுவித்திருக்கின்றோம். அதன் பின் அவர்களுக்கு பொருளாதார ரீதியான சுதந்திரத்தை வழங்கியிருக்கின்றோம். இப்போது அரசியல் விடுதலையைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இப்போது அதிகாரம் மக்கள் கரங்களில் உள்ளது. கிழக்கைப் போலவே வடக்கையும் விடுவித்து அரசியல் சுதந்திரத்திற்கான சந்தர்ப்பத்தை விரைவில் பெற்றுக் கொடுப்போம்.
தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின் அறிக்கைகள்:
கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் குறித்து தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் இன்னும் வெளிவரவில்லை. கண்காணிப்புக் குழுக்களின் அங்கத்தவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் சில சமயங்களில் ஒன்றுக்கொன்று முரண்பபாடுடையதாக அமைந்துள்ளன. தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் வெளிவந்தபின்பு அவை தனியாக அலசப்படும்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல
UPFA – 308886 ஆசனம் 18+2
UNP - 250732 ஆசனம் 15
JVP - 9390 ஆசனம் 01
TDNA - 7714 ஆசனம் 01 ம் பெற்றுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடுதலான் வாக்குகளைப் பெற்றதால் அவர்களுக்கு மேலும் இரு போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 58 விதமான வாக்குகளைப் பெற்று (105341 வாக்குகள்) 6 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 32.3 வீதமான வாக்குகளைப் பெற்று (58602 வாக்குகள்) 4 ஆசனங்களையும் வென்றுள்ளது. தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு 4.25 வீதமான வாக்குகளைப் பெற்று (7714 வாக்குகள்) ஒரு ஆசனத்தை வென்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 10 ஆசனங்களில் ஐக்கிய தேசியக் கட்சி 51.4 வீதமான வாக்குகளைப் பெற்று (70858 வாக்குகள்) 5 ஆசனங்களையும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 43 வீதமான வாக்குகளைப் பெற்று (59298 வாக்குகள்) 4 ஆசனங்களையும் ஜேவிபி 3 வீதமான வாக்குகளைப் பெற்று (4266 வாக்குகள்) ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 14 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 53 விதமான வாக்குகளைப் பெற்று (147247 வாக்குகள்) 8 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 44.5 வீதமான வாக்குகளைப் பெற்று (121272 வாக்குகள்) 6 ஆசனங்களையும் வென்றுள்ளது.
20 வருடங்களுக்கு முன்:
கிழக்கு மாகாண வரலாற்றில் கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரமென தனியானதோர் மாகாணசபை நடைபெறுவது வரலாற்றில் இதுவே முதற்தடவை. 1988ஆம் ஆண்டில் வடக்கு - கிழக்கு இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வட மாகாணத்திலிருந்து 36 உறுப்பினர்களும், கிழக்கு மாகாணத்திலிருந்து 35 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வடமாகாணத்தில் போட்டியின்றி ஈ.பி.ஆர்.எல்.எவ். 24 உறுப்பினர்களையும், ஈ.என்.டி.எல்.எவ். 12 உறுப்பினர்களையும் பங்கிட்டுக் கொண்டன. இதன் மூலம் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணசபையின் ஆட்சியுரிமை தமிழர் பெரும்பான்மைப் பலம்கொண்டதென்பது உறுதியான நிலையில்தான் கிழக்குமாகாணத்தில் அன்று தேர்தல் நடைபெற்றது.
இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணசபையில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஈ.என்.டி.எல்.எவ் ஆகிய அணிகளின் கூட்டு 55 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக்கட்சி அம்பாறை மாவட்டத்தில் 1 ஆசனத்தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் 3, அம்பாறையில் 9, திருமலையில் 05 என மொத்தமாக 17 ஆசனங்களையும் பெற்றிருந்தன. (சிறிலங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை.)
அன்று கிழக்கு மாகாணத்தில் 576 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 79% அம்பாறை மாவட்டத்தில் 55% திருமலை மாவட்டத்தில் 53% வீதமானோர் வாக்களித்திருந்தனர். 1988இல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின்படி வரதராசப் பெருமான் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தது.
மே 10, 2008 தேர்தல் ஒரு பார்வை:
தற்போது இரு தசாப்தங்களுக்கும் பல்லாயிரக் கணக்கான உயிரிழப்புகளிற்குப் பின் மே 10, 2008ல் இடம்பெற்ற கிழக்கு மாகாணத் தேர்தலில் சராசரியாக 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் வன்முறைகள் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்ற போதும் ஒப்பீட்டளவில் ”இலங்கைத் தேர்தலுக்குரிய ஜனநாயக பண்பு”டன் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் வாக்களிப்பு பெரும்பாலும் இனரீதியாக அமைந்துள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதன்படி முஸ்லீம்களின் வாக்குகள் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் - ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டிற்கு சென்றுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை தேர்தல் தொகுதி, திருகோணமலை மாவட்டத்தில் சேருவில தேர்தல் தொகுதி என்பன முழுமையான சிங்களப் பகுதிகளாகும். இவ்விரண்டு தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. சிங்கள மக்களின் வாக்குகள் பெரும்பாலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சென்றுள்ளது. ஜேவிபியும் சிங்கள மக்களின் வாக்குகளின் ஒரு பகுதியைப் பெற்றுள்ளது. தமிழ் வாக்குகளைப் பொறுத்தவரை திருகோணமலையில் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி - சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கூட்டுக்கே வாக்களித்து உள்ளனர்.
மட்டக்களப்பை பொறுத்தவரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டில் போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ் ஜனநாயகக் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களின் வாக்குகளின் ஒரு பகுதியைப் பெற்றுள்ளது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கூட்டுக்கும், ஐக்கிய தேசியக்கட்சி - சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸிற்கும்@ ரிஎம்விபி க்கும் எல்ரிரிஈ க்கும்@ மகிந்த அரசுக்கும் எல்ரிரிஈக்கும் இடையோயான பலப் பரீட்சையாகவே இது இத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இது கிழக்கு மாகாணம் தனித்துவத்துடன் இயங்க வேண்டும் என்பதற்கு ஆதரவாகவும் கொள்ள முடியும். இத்தனித்துவ நிலைக்கான ஆதரவு திருகோணமலையில் இல்லை என்பதையும் இத்தேர்தல் முடிவுகளில் காணலாம். அதனாலேயே திருகோணமலையில் உள்ள தமிழ் மக்கள் தமது வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கி உள்ளனர்.
கிழக்கின் இவ்வெற்றி மகிந்த ராஜபக்ச அரசைப் பொறுத்தவரை இரட்டிப்பு வெற்றியே. தேர்தல் வெற்றியும் அதனால் கிடைக்கப் போகும் அரசியல் வெற்றியும் மகிந்தவின் அரசியல் ஸ்தீரத்தன்மையை பலப்படுத்தும் எனறே எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஒரு ஜனநாயகத்துக்கு கிடைத்திருக்கும் வெற்றியென சர்வதேசத்திற்கு பிரச்சாரப்படுத்துவதில் ஜனாதிபதி மகிந்த சில செக்கன்களும் தாமதிக்கமாட்டார்.
இத்தேர்தலில் அரசுக்கு எதிராகவும் தங்களில் இருந்து பிரிந்து சென்ற கருணா - பிள்ளையான் குழுவுக்கு எதிராகவும் வாக்களிக்கும் படி விடுதலைப் புலிகள் விடுத்த அழைப்பு பெரும்பாலும் மட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மொத்தமான 11 ஆசனங்களில் அரசுக்கு சார்பான கட்சிகள் 7 ஆசனங்களை வென்றுள்ளன. மேலும் மகிந்த அரசின் ஆளும் கூட்டணியின் வெற்றி அரசியல் ரீதியாக ஒர் மூலைக்குள் முடக்கப்பட்டு இருக்கும் விடுதலைப் புலிகளுக்கு இன்னும் நெருக்குவாரத்தை வழங்க உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில யூஎன்பி யை தோற்கடிக்க வைத்த விடுதலைப் புலிகளால் ஆண்டுகள் கடந்தும் மாகாண சபைத் தேர்தலில் கூட அத்தவறைத் திருத்திக் கொள்ள முடியவில்லை. அவர்களது வேண்டுகோளுக்கு எதிராக மக்கள் வாக்களித்து உள்ளனர்.
இத்தேர்தல் ஜனநாயக ரீதியாக நடந்ததா? அல்லது அதற்கு விரோதமாக நடந்ததா? என்றால் ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப பதிலளிப்பர். ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள் எதிரானவர்கள், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் எதிரானவர்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்தே தேர்தல் ஜனநாயகமாக நடந்ததா இல்லையா என்பதற்குப் பதில் வரும். மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் வந்த நிலையில் இரு கட்சிகளுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாத நிலையிலேயே இருந்தன. ஆளும் கூட்டணி 10 ஆசனங்களையும் எதிர்க் கட்சிக் கூட்டணி 9 அசனங்களையும் பெற்றிருந்தன. இன்று (மே 11) நண்பகல் அளவில் அம்பாறை மாவட்ட முடிவுகள் வெயிளிடப்பட்டதன் பின்னரே ஆளும் கூட்டணியின் வெற்றி உறுதியானது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இத்தேர்தலில் அவர்கள் பெருமளவில் அக்கறை கொள்ளவில்லை. அதற்கு நியாயமான காரணங்கள் ஏராளம் உள்ளது. முக்கிய காரணம் இத்தேர்தல் அவர்களது வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. உண்மையில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் உள்ள எந்த மக்களுக்குமே கடந்த காலங்களில் நடந்த தேர்தல்கள் எந்த மாற்றத்தையும் கொடுக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னும் மக்களுடைய வாழ்வியல் நிலை மேலும் மேலும் மோசமடைந்தே சென்றிருக்கிறது. இது இங்கு பிரித்தானியாவுக்கும் பொருந்தும் போது இலங்கை எம்மாத்திரம்.
ஆயினும் தேர்தல்களே குறைந்தபட்ச ஜனநாயகத்தை மக்கள் அனுபவிக்க, தங்கள் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உள்ள ஒரே பொறிமுறை என்ற வகையில் அதனை நிராகரிக்க முடியாது.
வழமையான தேர்தலின் நச்சுச் சுற்றில் இருந்து இந்தத் தேர்தல் மட்டும் விடுபட்டு சரியான திசையில் செல்லும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் மக்களுக்கு இல்லை. ஒவ்வொரு தடவையும் மக்கள் சந்தர்ப்பங்களை வழங்கி களைத்தப் போய்விட்டார்கள். பிள்ளையார் பிடிக்கப் போய் பிள்ளையான் வந்த கதையாகிப் போச்சு இன்றைய கிழக்கு அரசியல். பிள்ளையான் மீண்டும் முருங்கை மரம் ஏறுவாரா அல்லது மக்களுக்கு தோழர் பிள்ளையாராவார என்பது தெரியவர நீண்ட நாள் காத்திருக்க வேண்டியதில்லை.
மக்களுடைய எதிர்பார்ப்புகள் மிகக் குறைந்த பட்சமாகவே இருந்த போதும் அதனையே அரசு அவர்களுக்கு வழங்க மறுக்கிறது. அம்மக்களுக்கு தலைமையை கொடுக்க முன் வந்தவர்கள் எல்லாம் அம்மக்களின் தலையிலேயே மிளகாய் அரைத்ததால் அரசும் தன் பங்கிற்கு அம்மக்களின் தலையில் மிளகாய் அரைக்கிறது. வன்முறை அரசியலும் அகதி வாழ்வும் மக்;களை விரக்தியின் விளிம்புக்கு தள்ளிக் கொண்டு செல்கிறது. ஆகவே அரசு கிழக்கை விடுவித்தாகிவிட்டது ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிறது என்று கும்மளாம் அடிப்பதை நிறுத்தி மக்களின் நாளாந்த வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
மே10, 2008 கிழக்கு தேர்தல் முடிவுகள்:
அம்பாறையில் ஆளும் கூட்டணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது:
கிழக்கிலங்கையில் சனத்தொகை அதிகமான அம்பாறையில் 14 மாகாண சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 11 அரசியல் கட்சிகளையும் 22 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 561 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனால் தான் இலங்கைத் தேர்தல் வரலாற்றிலேயே முதல் தடவையாக மிக நீளமான வாக்குச் சீட்டு பயன்படுத்தப்பட்டது. 409,000 வாக்காளர்களில் 293,000 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதில் 53 வீதமான வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. 44.5 விதமான வாக்குகளை மட்டுமே இரண்டாவதாக வந்த ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி பெற்றுள்ளது.
593000 சனத்தொகையுடைய அம்பாறையில் முஸ்லீம் மக்கள் 41.2 வீதமாக பெரும்பான்மையினராக உள்ளனர். இலங்கையில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாவட்டம் அம்பாறை. இங்கு தமிழ் மக்கள் மூன்றாவது சிறுபான்மையினராக 18.2 வீதத்தினரே உள்ளனர். சிங்களவர்கள் 38.8 வீதமாகவும் உள்ளனர். கிழக்கில் சனத்தொகை கூடிய மாவட்டம் அம்பாறை.
சம்மாந்துறை, அம்பாறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகiயுடைய அம்பாறை மாவட்டத்தில் கல்முனைத் தேர்தல் தொகுதியில் மட்டும் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை வாக்குகளை வென்றது. ஏனைய மூன்று தொகுதிகளிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது.
அம்பாறை:
சம்மாந்துறை தேர்தல் தொகுதி:
UPFA 24119 52.22%
UNP 21401 46.34%
JVP 179 0.39%
UNA 75 0.16%
USP 69 0.15%
NSU 8 0.02%
PFLT 8 0.02%
அம்பாறை தேர்தல் தொகுதி:
UPFA 47319 57.1%
UNP 31386 37.87 %
JVP 3693 4.46%
NSU 215 0.26%
UNA 71 0.09%
USP 55 0.07%
PFLT 8 0.01%
கல்முனை தேர்தல் தொகுதி:
UNP 27596 66.46%
UPFA 13468 32.44%
UNA 174 0.42%
USP 69 0.17%
JVP 30 0.07%
PFLT 15 0.04%
பொத்துவில் தேர்தல் தொகுதி:
UPFA 54619 58.56%
UNP 37488 40.19%
JVP 490 0.53%
UNA 270 0.29%
USP 98 0.11%
PFLT 27 0.03%
திருமலையில் யுஎன்பி - முஸ்லீம் காங்கிரஸ் கூட்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது:
திருகோணமலையில் 10 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 12 அரசியல் கட்சிகளையும் 19 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 403 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 242,000 வாக்காளர்களில் 151,000 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதில் 43.0 வீதமான வாக்குகளையே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. 51.4 விதமான வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக்கட்சி - முஸ்லீம் காங்கிரஸ் கூட்டு முன்னணியில் உள்ளது.
340000 சனத்தொகையுடைய திருகோணமலை, கிழக்கில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இரண்டாவது மாவட்டம். இங்கு 48.2 வீதமான தமிழர்கள் வாழ்கின்றனர். முஸ்லீம்கள் 28.2 வீதமாகவும் சிங்களவர்கள் 23.4 வீதமாகவும் உள்ளனர். கிழக்கில் சனத்தொகை குறைந்த மாவட்டமாக திருகோணமலை உள்ளது.
இங்கு சிங்கள மக்கள் செறிந்து வாழும் சேருவில தேர்தல் தொகுதியில் மட்டும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 61.4 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் மூதூர் தொகுதியிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் திருகோணமலை நகரத் தேர்தல் தொகுதியிலும் ஐக்கிய தேதியக் கட்சி - முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு வெற்றி பெற்றுள்ளது. திருகோணமலை நகரத் தொகுதி வழமையாகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான ஒரு தொகுதியாகவே இருந்து வருகிறது. மேலும் கிழக்கிலங்கை என்ற கோசத்துடன் திருகோணமலைத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் EPDP, TDNA ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அக்கட்சிகள் போட்டியிடவில்லை.
திருகோணமலை :
சேருவில தேர்தல் தொகுதி:
UPFA 21915 61.47%
UNP 10855 30.45%
JVP 2286 6.41%
USP 249 0.7%
EDF 125 0.35%
AITUF 9 0.03%
PFLT 7 0.02%
திருகோணமலை தேர்தல் தொகுதி:
UNP 28146 62.26%
UPFA 13828 30.59%
JVP 1408 3.11%
USP 537 1.19%
AITUF 311 0.69%
EDF 195 0.43%
PFLT 117 0.26%
மூதூர் தேர்தல் தொகுதி:
UNP 28233 59.08%
UPFA 18451 38.61%
USP 495 1.04%
JVP 160 0.33%
EDF 124 0.26%
AITUF 25 0.05%
PFLT 25 0.05%
மட்டு வில் ஆளும் கூட்டணியில் போட்டியிட்ட ரிஎம்விபி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது:
மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பில் 11 ஆசனங்களைப் பெறுவதற்கான இத்தேர்தலில் 12 அரசியல் கட்சிகளையும் 15 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 378 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 331,000 வாக்காளர்களில் 202,000 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதில் 58 வீதமான வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. 32.3 விதமான வாக்குகளை மட்டுமே இரண்டாவதாக வந்த ஐக்கிய தேசியக்கட்சிக் கூட்டணி பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முஸ்லீம் காங்கிரஸ் பிரதானமாகப் போட்டியிட்டது.
486000 சனத்தொகையுடைய மட்டக்களப்பில் 74.3 வீதம் தமிழர்கள், 23.4 வீதம் முஸ்லீம்கள் 1.4 வீதம் சிங்களவர்கள் ஆவர். கிழக்கில் தமிழ் மக்கள் மிகப்பெரும்பான்மையாக உள்ள மாவட்டம் மட்டக்களப்பு அதையடுத்து திருகோணமலை. அங்கு 48.2 வீதமான தமிழர்கள் வாழ்கின்றனர். கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் 44.7 வீதமாக உள்ளனர். அதனைத் தொடர்ந்து முஸ்லீம்கள் 32.4 வீதமாக உள்ளனர். சிங்களவர்கள் 23 விதத்தினர்.
மட்டக்களப்பு:
மட்டக்களப்பு தேர்தல் தொகுதி:
UPFA 52053 58.78%
UNP 29770 33.62%
TDNA 3222 3.64%
EPDP 1199 1.35%
EDF 1118 1.26%
USP 386 0.44%
JVP 218 0.25%
PFLT 73 0.08%
பட்டிருப்பு தேர்தல் தொகுதி:
UPFA 14379 42.89%
UNP 11829 35.28 %
TDNA 3594 10.72%
EPDP 2612 7.29%
EDF 509 1.52%
USP 268 0.8%
PFLT 57 0.17%
JVP 37 0.11%
கல்குடா தேர்தல் தொகுதி:
UPFA 36731 66.81%
UNP 15673 28.51%
EPDP 1421 2.58$
TDNA 443 0.81%
USP 284 0.52%
EDF 111 0.2%
JVP 97 0.18%
PFLT 17 0.03%
தபால் வாக்குகளில் 56 வீதமான வாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது:
மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள் வெளியாகி உள்ளது. மட்டக்களப்பில் 2159 வாக்குகளைப் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. மொத்தமாக செலுத்தப்பட்ட வாக்குளில் இது 51.7 வீதம். ஆதே போல் அம்பாறை மாவட்டத்தில் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளில் 4722 வாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது. செலுத்தப்பட்ட வாக்குகளில் இது 55.2 வீதம். திருகோணமலை மாவட்டத்தில் 62 வீதத்திற்கும் சற்று அதிகமாக 4938 வாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது.
திருகோணமலை தபால் வாக்கு முடிவுகள்:
UPFA 4938 62.17%
UNP 2481 31.24%
JVP 411 5.17%
AITUF 33 0.42%
USP 18 0.23%
EDF 13 0.16%
PFLT 10 0.13%
அம்பாறை தபால் வாக்கு முடிவுகள்:
UPFA 4722 55.24%
UNP 3401 39.79%
JVP 353 4.13%
NSU 27 0.32%
AIG22 12 0.14%
UNA 7 0.08%
USP 5 0.06%
PFLT 5 0.06%
மட்டு தபால் வாக்கு முடிவுகள்:
UPFA 2159 51.72%
UNP 1282 30.71%
TDNA 454 10.88%
EPDP 135 3.23%
EDF 78 1.87%
JVP 26 0.62%
PFLT 10 0.24%
USP 5 0.12 %
United People`s Freedom Alliance – UPFA
United National Party - UNP
Tamizh Democratic National Alliance - TDNA
Eelam People’s Democratic Party - EPDP
Eelavar Democratic Front - EDF
People`s Liberation Front - JVP
People`s Front of Liberation Tigers - PFLT
Nawa Sihala Urumaya - NSU
Independent Group 22 - AIG22
United National Alliance - UNA
United Socialist Party - USP
Akila Ilankai Tamil United Front - AITUF
Sunday, May 11, 2008
PAFFREL interim report for the Eastern Provincial Council Election
PAFFREL interim report for the Eastern Provincial Council Election | ![]() | ![]() | ![]() |
UPFA wins 'rigged' EPC election
Sri Lanka's President Mahinda Rajapaksa's ruling UPFA alliance wins the Eastern Provincial Council (EPC) election with 18 seats and 2 bonus seats in the election held on Saturday with widespread rigging. The opposition UNP-SLMC alliance receives 15 seats, 1 seat for the JVP and 1 seat for Tamizh Democratic National Alliance. Meanwhile The Campaign for Free and Fair Elections (CaFFE) observed that the Eastern Provincial election, was not at all ‘free and fair’. Despite the rigging, the opposition UNP-SLMC alliance wins the Trincomalee district where it had promised to resettle displaced Tamils in Champoor.
Despite the rigging, the opposition UNP-SLMC alliance wins the Trincomalee district.
Displaced people in Trincomalee have voted for the UNP-SLMC alliance which had promised them to resettle the people in their own places and take up the issue of proposed Champoor power-plant with India.
Meanwhile, paramilitary Pillayan Group has played a key role in widespread election malpractice, paving the way for UPFA victory in Batticaloa and in the Tamil areas of Ampaa'rai district.
"Dominance of rule of law had been overtaken by a dominance of violence," the CaFFE observed.
The district wise break-down of expected seats based on the results announced so far, follow:
Trincomalee: 5 UNP-SLMC, 4 UPFA and 1 JVP
Batticaloa: 6 UPFA, 4 UNP-SLMC and 1 TDNA
Ampaa'rai: 8 UPFA and 6 UNP-SLMC
Extracts from the report by the Campaign for Free and Fair Elections (CaFFE) released at the end of the election day follow:
"The Campaign for Free and Fair Elections (CaFFE) observed that the Eastern Provincial election, which was held today, was not at all ‘free and fair’. This is due to the reason that it very clearly shown that dominance of rule of law had been overtaken by a dominance of violence. In all three district that voting was conducted in there have been incidents of voters being attacked and prevented from casting their votes etc. CaFFE observed that polling agents who had arrived at the polling booths in the morning have had to leave because of the prevailing climate of intimidation.
"In all three districts there have also been reports of polling booth agents of certain political parties being attacked, chased away, not allowed to enter into the polling booths and also incidents in which they were abducted.
"In the Valachenai area, monitors observed that election commission officials were totally disregarded and certain factions perpetrated organized disturbances against the voters who were suspected to be casting votes against certain political parties. We also observed that organized gangs in many areas located in the Digamdulla and Trincimalee districts had been methodically stationed in these areas prior to election. Security personnel and law enforcement officials could not take any action against them. In Dehiattakandiya it was evident that there was a total climate of violence and intimidation and these gangs had systematically gone into selected areas and attacked selected people.
"In Batticaloa, CaFFE observed 14 and 15 year old children casting votes without being challenged. They carried out such illegal voting with or without their voting cards, ballots paper and even without any identification documents.
"Non- State armed groups were seen in areas around Batticaloa and Kalmunai carrying out election activities. They were observed to immediately withdraw from polling booth areas when they noticed election observers approaching, they were then seen to return to polling booths once they perceived that the elections monitors had left. In Trincomalee, CaFFE observed that a Minister had brought Internally Displaced People from Puttalam to cast votes and furthermore, internally displaced people from the Trincomalee itself had been methodically organized and taken to vote."
"Parallel to these observations CaFFE also observes that the people of the Digmadulla District have been seriously intimidated by the alleged acts of the LTTE, namely the bomb explosion and mortar attack that took place in Ampara and the attack on the ship in the Trincomalee harbor."
"On the foregoing observations CaFFE would like to request that the election commissioner annul polling of certain polling booths and direct a re-polling in the polling booths of all three districts where serious violence and election malpractices have taken place."
"We strongly feel that the election commissioner should pay special attention to polling booths in the Verugal, Kappalthurai and Echampaththu divisional secretariat areas located in the Trincomalee District, the Valachenia, Ottamavadi, Porrative, Kokadicholai, Kathankudai and Arriampethi areas located in the Batticaloa district and in the Tirukovvil and Akkaraipathtu areas located in the Digamadulla District."
No room for a Muslim Chief Minister with the UPFA
| By M.S. Shah Jahan In May last year when the SLMC chief and the Secretary General had dinner with me on my invitation, out of Sri Lanka, the chief commented, referring to the strayed cow from Kattankudy that had come back to the fold at that time, ‘so and so is also now with us’. I replied immediately, "at the moment". The leader’s face was saddened and he didn’t proceed further. Today it is proved. |
Though I have no personal rapport or enmity with this said politician, I do remember having met him once in Siravasty for a brief period, during his first term and felt he could turn out to be a good politician if moulded properly. Alas he went astray.
Well, this guy who entered parliament at a tender age became notorious for his political oscillation. In 1989 he promised to share his seat with two other persons but backed out. In a way, he was the first SLMC product that went against the founder and since then he has changed a few buses.
The well known presidential adviser, [I don’t think he attended any Dale Carnegie course in L.A] a real wheeler dealer, a man who seems to know the art of how to entice and what carrot to throw to troubled beauties of less virtue, has succeeded in wooing this man who would ultimately become a laughing stock if trounced heavily at the hands of SLMC.
One wonder if the allegations are true that it was the pressure exerted by a leading business group that handles snack stalls to insurance and banking - to recover the huge outstanding of profit sharing Sharia loan, that pushed him to the lap of the presidential adviser?
The pinnacle of the Government affiliated Muslim politicians today is the Chief Minister’s post of the Eastern province. Is it another Aladdin’s lamp that could do all the wonders in the world? Will milk and honey flow in the streets of the East as soon as a Muslim becomes a CM? No not at all. Frankly it is a ruse to hood wink the innocent Muslim masses under the guise of the Chief Ministerial post, and also to hide their political bankruptcy to maintain their position for the next general election where many of them are supposed to be washed out.
Which Chief Minister has achieved great heights in his province? Under the present constitution even the Prime Minister has no power. The rest are mere puppets or moppets.
Hisbullah vehemently justified his cross over from SLMC stating that by joining government forces only he could obtain a CM post for a Muslim and that too for himself. Now he and other UPFA Muslim ministers and MPs including Mrs. Ferial Ashraff also say that the President had said that the chief minister’s post of the Eastern province would be given to the group that gets the largest seats.
But as far as the public knows no such statement ever emanated from the horse’s mouth. By other Muslim ministers ministers merely attributing the promise to him but the President actually not saying it will obviously give the President a chance to act according to the situation as he hasn’t officially committed himself. If so, is this another way to deceive the people by unscrupulous politicians?
Another twist to the politcal tale is Hisbullah saying the Eastern province CM post could be shared too. Oh Allah, he talks about polygamy. Is there a provision for more than one CM?
"If I become CM, Pillayan will be Vice CM, if he becomes CM, I will be Vice CM". Who is to believe his words? What a merry-go round is this?
The way he said no to others 20 years ago, he might say the same to the TMVP goon too, or the latter can also turn against him. Anyway as the credibility of both contenders are in question voters might not put the UPFA in a predicament but relieve them by voting for the opposition.
Further, Hisbullah in his political career has spent more time outside the SLMC than within it. But some sections of the media funnily enough continue to dub him as ‘ SLMC’s strong man’.
May I ask these sections of the media in what way he is strong? He is of lean and thin figure, he does not have the physique of a wrestler.
Besides, whether Eastern Muslims deserve the CM post or not - whetehr it is essential or not, I in my article of April 25th 2007 in another paper described Karuna as ’the future Chief Minister of the Eastern province’. It was at that time as obvious as the sun rising from the East. The rulers never had any agenda for a Muslim CM. Not even a thought was given. But the priority was to end the marriage of convenience the regime is having with ex Eastern tigers by way of baptizing them in the name of democracy, come what may.
After having cleared the East of the LTTE by setting a thief to catch a thief, the statement that, ‘the TMVP has given up its arms for the sake of democracy’ find no evidence when the rebels themselves admit carrying weapons and allow no opposition in their terrain, controlling their masses dictatorially. Bullet or ballot is the saying. Here a group has a bullet in one hand and a ballot in the other. Is this the democracy envisaged for the East under TMVP? Do they expect the LTTE to invade the East like Genghis Khan used to do while the forces are holding them in the North? A French foreign Minister once said, "If I am to get done a dirty job, I give it to a gentleman who will do the job and stay quiet. If given to a dirty man, one day I will need another dirty man to get rid of him".
In 1989, after the Soviet withdrawal from Afghanistan, Pakistani prime minister late Benazir Bhutto told President Bush, by aligning the United States with the most extremist Mujahideen groups [which gave birth to Al-Quaida] , "you are creating a veritable Frankenstein", a statement proved correct. The present events in Sri Lanka indicate that a Frankenstein is being created in the East under the false impression of introducing democracy. Let us see how things turn out for Lanka.
Above all, democracy means every thing for every body where all is equal. But the SLFP is founded on the opposite direction only, basing one religion and one race as prime and bashing the rest. All are subordinates. That is their real vote bank too. [The Jews too call themselves the superior race and all others are to serve them].
Though Muslims to some extent were accommodated in a corner of the SLFP camp, Tamils were not that welcome and SLFP’s antipathy to Tamils was well known to the country too. One can not forget the roaring words of the late Agricultural Minister Kobbekaduwa in the 80s that he would throw late Thondaman to the other side of the sea. Unfortunately the Kandyan minister was not alive to see the same Thondaman keeping his party alive in throne.
This government’s democracy is reflected well in the state media that is full of propaganda news. The news is filled with self adulation, crowing about their achievements, slandering opposition politicians while no opposition news is presented. The State media belongs to the public and is run by public funds it does not belong to a party.
In an election, public properties like newspapers, radio and television which are run by people’s money, regardless to their party affiliation or no party interest, have a code of conduct that emphasizes how much government side news it should carry, how much opposition news it should carry. Are the advertisement dues of the 2005 presidential election to state organizations fully settled?
That way, democratic values find fewer places in the SLFP. The present regime supersedes all others in democratic abuse/ election fraud in every quarter. They write their own rules. Heads I bat, tails you field, and the umpire is my nominee, is their motto. Rather than playing such matches they can say we are in power, so we deserve victory, no election necessary.
The present boast that the East was to have a "Massive" development is a fantasy. To do massive things one needs a massive amount of funds. If we have funds or if we administer funds properly we need not go to Shylock’s 8% interest. Or else, Is His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum staying at the rest rooms of the Batticaloa railway station with his kitty to build another Dubai in the East?
Look at Colombo. It stinks with garbage and sinks with rain. The road from the airport to the city is very narrow, nobody follows traffic rules and it is dark in the night giving a poor first impression to visitors.
Nothing has been done for decades. The prestigious Marine drive is full of holes as if gem mining was conducted and it’s dim after sun set with insufficient lights. Where does the rate payer’s money go? When the fate of the capital is such, how can we have a "massive" development in the East?
A former SLMC MP and presently an ambassador, once told me, Madam asked me "though we do for Muslims, they go for the UNP only. Why? I said trade is the backbone of the community. UNP does not interfere with trade or in their day to day life". Have the Easterners forgotten the interference to their daily life, the Tsunami swindle and the hurdles placed on resettlement etc.? When it is so where is the room for a Muslim CM with the UPFA? The proverb is, if you run after two sheep, you catch neither.
'I am eligible' says Pillayan
![]() | ![]() |
TMVP leader says the group will carry arms until their security is guaranteed |
Pillayan told Sivaramakrishnan Parameswaran of BBC Tamil Service that his group will not lay down arms until such time his security is guaranteed by the authorities.
"We will have to use the weapons until we defeat terrorism," the former member of the LTTE, described by the authorities as "terrorists", said.
![]() | ![]() ![]() TMVP leader, Pillayan |
The TMVP leader, Sivanesathurai Chandrakanthan, has secured 41,936 preferential votes ahead of the other CM hopeful MLAM Hisbullah, who has secured 35,949 preferential votes, according to media reports.
The ruling United Peoples Freedom Alliance (UPFA) General Secretary, Minister Susil Premjayanth, told media last week that the alliance agreed to offer the post to the ethnic community that secures most of the councillors.
Minister supports Hisbullah
The unofficial results indicate that more Muslim councillors were elected than Tamil councillors for the Eastern Provincial Council.
![]() | ![]() |
Muslim ministers have voiced support to Mr. Hisbullah to become CM |
If the government abide by the earlier pledge, Mr. Hisbullah, who crossed over to the government from the Sri Lanka Muslim Congress (SLMC) days before the nominations, should be appointed as the CM.
A Muslim government minister has also expressed his support to the regional Muslim leader.
Minister Najeeb A Majeed told journalist Swaminathan Natarajan of BBC Tamil Service in Trincomalee that Mr. Hisbulla is more experienced to hold a public office.
“He has hold many public offices including being a minister. And he has a very good record of working for the Tamil and Muslim unity,” the minister said.